இந்தாண்டு தீபாவளியையொட்டி டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதித்தது மாநில அரசு.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த மூன்று வருடங்களில் தீபாவளியின் போது டெல்லியில் காற்று மாசு ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிர்களை காப்பாற்றவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காற்று மாசு காரணமாக தொடர்ந்து டெல்லியில் நான்கு ஆண்டாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வியாபாரிகள் பட்டாசுகளை பதுக்கி வைத்த பிறகு மாசுபாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தாமதமாக முழு தடை விதிக்கப்பட்டது. இது வியாபாரிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
இந்த முறை முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டதால் முழு தடையை கருத்தில் கொண்டு, எந்த வித சேமிப்பையும் செய்ய வேண்டாம் என்று அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…