ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது.பின்னர் 2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு மே மாதம் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
அதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை கடந்த 03-ம் விசாரித்த நீதிமன்றம் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும் சாதாரண மனிதர்தான் ” என கூறியது.
மேலும் இன்று ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெகன் மோகன் ரெட்டி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…