டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அதில், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார்.
முன்னதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் செய்கையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, 150 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறார் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனை முற்றிலும் மறுத்த தேர்தல் ஆணையர், இது சரியல்ல. ஒரு வதந்தியை பரப்பி அனைவரையும் சந்தேகிக்க வைக்கின்றனர். அவர்கள் குற்றம் சாட்டிய அனைவரும் மாவட்ட ஆட்சியர்கள். அப்படி என்றால் அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தேர்தல் தலைமை அதிகாரிகள். ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரியை வேட்பாளராக இருக்கும் ஒருவர் அதிகாரம் செலுத்த முடியுமா? அப்படி யார் செய்தது என்பதை நீங்கள் வெளிப்படையாக சொல்லுங்கள். அதற்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறினார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…