சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு

Default Image

ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 1 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து கடந்த 30-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி  வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.மேலும்   ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை அழித்துவிடுவார் ப.சிதம்பரம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தங்கள் தரப்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும்  சிபிஐ தரப்பில் வாதிட்டார். இதையடுத்து சிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு மீதான நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்