வீட்டில் சமைத்த உணவு வேண்டும் !சிறையில் உள்ள சிதம்பரம் சார்பில் மனு

வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.அதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட், சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்று வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சிதம்பரத்துக்கு வருகின்ற 3 ஆம் தேதியுடன் காவல் முடிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025