ப .சிதம்பரம் பில்லாவா , ரங்காவா உச்சநீதிமன்றத்தில் கபில் சிபில் ..!

Default Image

முன்னாள் மத்திய அமைச்சர்  ப .சிதம்பரத்தை  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ , அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர்.முதலில் சிபிஐ கைது செய்து சிதம்பரத்தை விசாரித்து வந்தது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை   தனித்தனியாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனால் அமலாக்கத்துறை  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு  வழக்கில் சிதம்பரத்தை கைது செய்தது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.
இதனால் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை  வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு  ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில்  நேற்று முன்தினம்  நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார். அவர் கூறுகையில்,  ப.சிதம்பரம் என்ன “பில்லா , ரங்காவை போல கடத்தல்காரரா ?  அவரை இப்படி  நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்