சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு !இன்று விசாரணை

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்  ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். ப.சிதம்பரம் தரப்பு, சிபிஐ தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை இன்றைக்கு  ஒத்திவைத்தது.இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்