Categories: இந்தியா

சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.!

Published by
செந்தில்குமார்

இந்த மாத இறுதிக்குள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், இன்று காலை 8 மணி முதல் 20 தொகுதிகளில் மட்டும் தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு  நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் உள்ள பல இடங்கள் நக்சல் பாதித்த பஸ்தார் பிரிவில் உள்ளதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடக்கும் இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சத்தீஸ்கரில் உள்ள 10 தொகுதிகளில் மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

அதன்படி மோலா-மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், கான்கேர், கேஷ்கல், கொண்டகான், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கோண்டா ஆகிய இடங்களில் 10 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மோஹ்லா மன்பூரில் 73% ஆகவும், அன்டகரில் 65.67% ஆகவும், பானுபிரதாப்பூரில் 68.50% ஆகவும், தண்டேவாடாவில் 51.90% ஆகவும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கைர்கர், டோன்கர்கர், ராஜ்நந்த்கான், டோங்கர்கான், குஜ்ஜி, பஸ்தர், ஜக்தல்பூர், சித்ரகோட், பண்டாரியா மற்றும் கவர்தா ஆகிய தொகுதிகளில் மக்கள் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் 3 மணி நிலவரம் குறித்து பார்க்கலாம்.

முதல் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 59.19% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல, மிசோரம் மாநிலத்தில் 69.86% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Published by
செந்தில்குமார்

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

1 hour ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

3 hours ago