Chhattisgarh CM Bhupesh Baghel [Image source : Twitter/Bhupesh Baghel]
இந்த மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராம் மாநிலத்தில் 40 தொகுதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதே போல 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இங்கு காங்கிரஸ் -பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இனி அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் சிறிது ஓய்வு எடுப்பார்கள்.
நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.! பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!
வரும் நவம்பர் 17க்கு பிறகு ஓய்வு எடுத்து, அவர்கள் குடும்பத்தை கவனிப்பார்கள். மீண்டும் மக்களவை தேர்தலுக்கு முன்னர் வருவார்கள். என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்தார்.
அதாவது, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக அண்மை காலமாக அடிக்கடி சோதனை (Raid) செய்து வருகின்றனர். சதீஸ்கர் மாநில முதல்வர் மீது கூட ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாய் வரையில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…