சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது…!

Default Image

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் கைது. 

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல். உத்திரபிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் பிராமணர்களை இழிவாக பேசியுள்ளார். இதனையடுத்து, இவர் மீது, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள டி டி நகர் காவல் நிலையத்தில் சர்வ பிராமின் சமாஜ் சார்பில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து, சத்தீஸ்கர் முதல்வர் கூறுகையில், என் ஆட்சியில் அனைவரும் சமம். எனக்கும் என் தந்தைக்கும் இருவேறு கருத்தில் உடன்பாடு உள்ளது அனைவரும் அறிந்ததே. எங்கள் அரசியல் பார்வையும் நம்பிக்கையும் வெவ்வேறானவை. ஒரு மகனாக நான் அவரை மதிக்கிறேன், ஆனால் ஒரு மாநில முதல்வராக அவரின் தவறை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்