லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சத்தீஸ்கர் முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று லக்னோ விமான நிலையத்திற்கு வந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து, விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வன்முறை நடந்த இடத்திற்கு செல்ல உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டர்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…