சத்தீஸ்கர் முன்னால் முதல்வர் ராய்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

Default Image

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் திரு. அஜித் ஜோகி அவர்கள் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக  கடந்த  2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் . இவருக்கு வயது  74 . இவர்,  ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.  இவர் ஏற்கனவே  பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்படவே ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீநாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு சுவாச பிரச்சனை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அதன் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்