ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்ட சந்திராயன்-2 ஆர்பிட்டார் ஆய்வுப்பணியை 7 ஆண்டுகள் வரை தொடரும் – இஸ்ரோ விஞ்ஞானிகள்!

Published by
Rebekal

சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார் 7 ஆண்டுகள் வரை ஆய்வு பணியை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே முதல் முறையாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியிருந்தது. தரையிறங்குவதில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் மற்றும் தரவுகளை நல்ல முறையில் அனுப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பபடும் விண்கலத்தின் ஆய்வு பணிக்காக பொருத்தப்பட்டிருந்த ஆர்பிட்டார் எனும் நவீன கருவி மற்றும் அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சிந்தடிக், கேமராக்கள் ஆகிய எட்டு விதமான ஆய்வு கருவிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஓராண்டில் மட்டுமே சந்திராயன் 2 விண்கலம் 4 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட முறை நிலவை சுற்றி வந்து பல்வேறு தகவல்களை சேகரித்து தந்துள்ளது. இந்நிலையில் சந்திராயநில உள்ள ஆர்பிட்டர் எனும் நவீன கருவியின் ஆய்வுக் காலம் ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது அதில் எரிபொருள் அதிக அளவு இருப்பதால் இது ஏழு ஆண்டுகள் வரையிலும் தனது ஆய்வு பணியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago