Mission Director Of Chandrayaan-1 [file image]
பெங்களூரு : சந்திரயான்-1 இயக்குநராக பணியாற்றிய முன்னாள் இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் ஹெக்டே (71) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக இந்தியாவின் ISRO சார்பில், முதன்முதலாக சந்திரயான்-1 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள், 22 அக்டோபர் 2008 முதல் 28 ஆகஸ்ட் 2009 வரை நடந்த நிலையில், அதன் திட்ட இயக்குநராக ஸ்ரீநிவாஸ் ஹெக்டே இருந்துள்ளார்.
1978 2014 வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) பணிபுரிந்த ஸ்ரீநிவாஸ், UR ராவ் செயற்கைக்கோள் மையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஆயிரக்கணக்கான விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளிலும் பங்கேற்றுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…