Chandrababu Naidu [file image]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு இன்று அமராவதியில் உள்ள அம்மாநிலச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் முன்னிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் 18வது முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
நேற்று முதலமைச்சருடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவின் எம்எல்ஏக்களும் அடங்குவர். ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமராவதியின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டார்.
சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாயுடு, பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.15,000, ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.20,000 ஆண்டு நிதியுதவி உட்பட ஆறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…