சவால்களை ஜனநாயக முறையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடைபெறும் 82 வது சபாநாயகர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஜனநாயகம் என்பது இந்தியாவின் அமைப்பு மட்டுமல்ல, அது இந்தியாவில் இயல்பான ஒன்று.
வரும் ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே அனைவரும் ஜனநாயக முறையில் ஒற்றுமையாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வடகிழக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நிறுத்தப்பட்ட பெரிய வளர்ச்சி திட்டங்களை மீண்டும் நிறைவேற்றி முடிப்பதற்கும் ஜனநாயகம் தான் உதவும்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது இந்தியா வெற்றி பெறுவதற்கும் அனைவரும் ஜனநாயகத்தின் படி ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டது தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா தற்போது 110 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக தோன்றியது தற்பொழுது சாத்தியமாகி உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…