விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்கள்-மத்திய ரயில்வே..!

Published by
Sharmi

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகப்பெரிய முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரயில்வேத்துறை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அல்லது  பன்வேல், சாவந்தவாடி சாலை அல்லது ரத்னகிரி இடையே 72 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் 72 சிறப்பு ரயில்களில் ஒரு ஏசி-2 அடுக்கு மற்றும் ஏசி3 அடுக்கு, நான்கு ஏசி-3 அடுக்கு, 11 ஸ்லீப்பர் வகுப்புகள், 6 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்கள் வசூலிக்கும் முன்பதிவு ஜூலை 8 முதல் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி (சுற்றுலா கார்ப்பரேஷன்) வலைத்தளத்திலும், பயணிகள் ரயில்வே அமைப்பு மையங்களிலும்(பி.ஆர்.எஸ்) தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களின் பட்டியல் பின்வருமாறு:

1. சி.எஸ்.எம்.டி.-சாவந்தவாடி சாலை தினசரி சிறப்பு ரயில்கள்(36 பயணங்கள்)

01227 சிறப்பு ரயில் தினமும் அதிகாலை 12.20 மணிக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சவந்த்வாடி சாலையை அடைகிறது.  திரும்ப 01228 சிறப்பு ரயில் தினமும் பிற்பகல் 2.40 மணிக்கு சாவந்த்வாடி சாலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸை அடைகிறது. இதே போன்று செப்டம்பர் 5 முதல் 22 வரை இயக்கப்படும்.

இந்த ரயில்கள் தாதர், தானே, பன்வெல், ரோஹா, அடாவாலி, கங்கவாலி, மற்றும் ரத்னகிரி போன்ற இடங்களில் நிறுத்தப்படும்.

2. சி.எஸ்.எம்.டி-ரத்னகிரி இரு வார சிறப்பு ரயில்கள் (10 பயணங்கள்)

01229 இரு வார சிறப்பு ரயில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 10.35 மணிக்கு ரத்னகிரிக்கு வந்து சேரும். திரும்ப 01230 இரு வார சிறப்பு ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் இரவு 11.30 மணிக்கு ரத்னகிரியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸை அடையும். இதே போன்று செப்டம்பர் 6 முதல் 20 வரை இயக்கப்படும்.

இந்த ரயில்கள் பன்வெல், ரோஹா, மங்காவ்ன், வீரி மற்றும் கெட் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இருப்பினும், தாதர் மற்றும் தானேவில் 01229 சிறப்பு ரயில் மட்டும் நிறுத்தப்படும்.

3. பன்வெல்-சாவந்த்வாடி சாலை மூன்று வார சிறப்பு (16 பயணங்கள்)

01231 மூன்று வார சிறப்பு ரயில் ஒவ்வொரு செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு பன்வேலில் இருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 8 மணிக்கு சாவந்த்வாடி சாலையை வந்தடையும். திரும்ப 01232 மூன்று வார சிறப்பு ரயில் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சாவந்தவாடி சாலையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு பன்வேலுக்கு வந்து சேரும். இதே போன்று செப்டம்பர் 7 முதல் 22 வரை இயக்கப்படும்.

இந்த ரயில்கள் ரோஹா, வீர், கேட், சவர்தா ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். ஆரவாலி சாலை, மற்றும் கங்கவலி போன்ற இடங்களிலும் நிறுத்தப்படும்.

4. பன்வெல்-ரத்னகிரி இரு வார சிறப்பு ரயில்கள் (10 பயணங்கள்)

01233 இரு வார சிறப்பு ரயில் ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்கு பன்வேலில் இருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 3.40 மணிக்கு ரத்னகிரியை அடையும். திரும்ப 01234 இரு வார சிறப்பு ரயில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையும் ரத்னகிரியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பன்வெலுக்கு வந்து சேரும். இதே போன்று செப்டம்பர் 9 முதல் 23 வரை இயக்கப்படும்.

இந்த ரயில்கள் ரோஹா, மங்காவ்ன், வீர், கேட், சவர்தா, சில்பன், ஆரவாலி சாலை, மற்றும் சங்கமேஸ்வர் சாலை ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

 

Published by
Sharmi

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

13 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

27 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

57 minutes ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

1 hour ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

2 hours ago