கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை இந்தியாவில் மட்டும் 150,793 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிலும் இந்தியாவின் சில மாநிலங்களில் தீடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சூடன் நேற்று காணொலி காட்சி உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆரோக்கியா சேது செயலியின் நன்மைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
எளிதில் தாக்கும்படியுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தனி கவனம் செலுத்தும்படி பேசப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற நோயாளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…