நடைபெற உள்ள மாநில தேர்தல்களுக்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
எட்டு கட்டங்களாக மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி வரையிலும் நடைபெற கூடிய இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டாம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை தான் மதிப்பதாகவும், ஆனால் ஏன் மாவட்டங்களைப் பிரிகிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள தெற்கு பர்கானாஸ் மாவட்டம் எங்கள் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள இடம். இந்த இடத்தில் மூன்று கட்டமாக பிரிக்கப்பட்டது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களின் வசதிக்காகவா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவ்வாறு செய்தால் அது தவறு எனவும், மாநில தேர்தலுக்காக மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் சாதாரண மக்களாக இருந்தாலும், எங்கள் களத்தில் நாங்கள் போராடுவோம் எனவும், பணம் தவறாக பயன்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் தங்கள் சொந்த மாநிலமாக மேற்கு வங்காளத்தை நினைக்க வேண்டுமே தவிர, பாஜகவின் கண்களிலிருந்து பார்க்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…