Ashwini Vaishnaw [Imagesource : HindutanTimes]
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்து எச்சரிக்கை செய்தியானது காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பவன் கேரா, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பபட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஐ-போன்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரத்தைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த விவகாரத்தில், அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உரையாடல்கள் குறித்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அலர்ட் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரத்தைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…