மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மத்திய நீர்வளம் ,போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து மேகதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதித்தார். இரு மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு விரைவில் அழைப்பு விடுக்க அதிகாரிகளுக்கு நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளதாக குமாரசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். இதனால் இரு மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…