கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளத்தில் 2 நாள்களில் தமிழ் மொழி சேர்ப்பு.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது.
இதனால் தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற கோவின் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது, ஆனால் அதன் இணைய பக்கத்தில் 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன, இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகத்தில் அரசியல் தலைவர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது, இதன்விளைவாக தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து மத்திய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் வலியுறுத்தியிருந்தார், இதையடுத்து மத்திய அரசு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.
அதில் கோவின் இணையதள வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இன்னும் 2 நாள்களில் தமிழ் மொழி கோவின் இணையதளத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…