கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியினை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. லஷ்மி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி (எல்விபி) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில்,சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. அதன்படி, 17.11.2020 முதல் 16.12.2020 வரை அதன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ், லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், டிபிஎஸ் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறை கடன்களில் 1.6 பில்லியன் டாலர் உரிமையைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, ஒருங்கிணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, டிபிஎஸ் இந்தியா புதிய மூலதனமான, ரூ.2,500 கோடியை எல்விபியில் செலுத்துகிறது. புதிய விதிப்படி, ஒரு வைப்புதாரர் வைத்திருக்கும் அனைத்து வகையான கணக்குகளுக்கும் திரும்பப் பெறும் வரம்பு ரூ.25,000-ஐ தாண்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு உள்நாட்டு வங்கியை மீட்டெடுப்பதற்காக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது இதுவே முதம்முறையாகும்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…