மாவோயிஸ்டுகளுக்கு ஒரு நாளும் மன்னிப்பே கிடையாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டம் .
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ள தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஏதும் உள்ளதா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில் நக்சலைட்களை கட்டுப்படுத்தவும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சூழ்நிலைகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல முனை திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அட்டகாசமும், வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசமும் உள்ளது. அவர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் இந்திய ராணுவ வீரர்களின் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகிறது. எனினும் மாவோயிஸ்ட்களின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்ட விதிகளின்களின்படியே அரசு நடந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…