“ஓய்வூதியம்;இவை கட்டாயமில்லை” – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

டெல்லி:வாழ்க்கைத் துணையின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மேலும்,மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற,புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஓய்வூதிய பயனர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய ஓய்வூதியத்துறையின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தபின், டாக்டர் ஜித்தேந்திர சிங் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“சமூகத்தில் அனைத்து தரப்பினரும், எளிதாக வாழ்வதற்கு தேவையானதை செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும் முயற்சித்து வருகிறது.ஓய்வூதியதாரர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்கள்  தங்களின் அனுபவம் மூலம் நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றியுள்ளனர்.

ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவரது வாழ்க்கைத் துணையுடன் சேர்த்து கூட்டு வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை என தலைமையகம் கருதினால், இந்த விதிமுறையை தளர்த்தி கொள்ளலாம். ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறும் வாழ்க்கைத் துணை ஏற்கனவே உள்ள கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், புதிய வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

9 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

10 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

11 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

12 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

12 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

13 hours ago