டெல்லி:வாழ்க்கைத் துணையின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மேலும்,மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற,புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஓய்வூதிய பயனர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய ஓய்வூதியத்துறையின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தபின், டாக்டர் ஜித்தேந்திர சிங் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“சமூகத்தில் அனைத்து தரப்பினரும், எளிதாக வாழ்வதற்கு தேவையானதை செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும் முயற்சித்து வருகிறது.ஓய்வூதியதாரர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்கள் தங்களின் அனுபவம் மூலம் நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றியுள்ளனர்.
ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவரது வாழ்க்கைத் துணையுடன் சேர்த்து கூட்டு வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை என தலைமையகம் கருதினால், இந்த விதிமுறையை தளர்த்தி கொள்ளலாம். ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறும் வாழ்க்கைத் துணை ஏற்கனவே உள்ள கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், புதிய வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…