Categories: இந்தியா

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

Published by
பாலா கலியமூர்த்தி

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல்.

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை, 2020ம் ஆண்டு தொடங்கி 2021ல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.  இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்களிடம் 31 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதில், குறிப்பாக குடும்பங்களில் தொலைபேசி இணைப்பு, இணையதள வசதி, செல்போன் அல்லது ஸ்மார்ட்போன், கணினி, சைக்கிள், ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள், கார், ஜீப் அல்லது வேன் போன்றவை உள்ளனவா? என்பன போன்ற கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், புதிய அட்டவணையை அரசாங்கம் இன்னும் அறிவிக்காத நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. நாட்டில் இது முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

3 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

3 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

4 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

6 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

7 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

8 hours ago