பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள் – நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுமாறு நிதி ஆயோக் உறுப்பினர் வலியுறுத்தல்.

டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுமாறு தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொரோனா சூழலில் பண்டிகைகளை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும். இதனை அறிவுரை அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். கொரோனா வைரசுக்கு கொண்டாடட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.

இதனால் அடுத்தடுத்த நாட்களில் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்தார். வைரசுக்கு வாய்ப்பு கொடுத்துவிட கூடாது. தீபாவளி வரை பண்டிகைகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் 35 மாவட்டங்களில் கொரோனா பரவும் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தங்கள் வீட்டிலேயே கொண்டாடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது என்றும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago