Categories: இந்தியா

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு…தகவல் போலியானது CBSE விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடு, தகவல் உண்மையில்லை என சி.பி.எஸ்.இ விளக்கம்.

இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளை, கிட்டத்தட்ட 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதுபோன்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்த சமயத்தில்  CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான சரியான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வாரியம் ஒரே நாளில் வெளியிடுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என இணையத்தில் வெளியான அறிக்கை போலியானது என CBSE ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

7 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

26 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago