சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, சிபிஎஸ்இ வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் கணவனுக்கு மனைவி பேச்சை கேட்டால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலின பாகுபாடு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வில், குஜராத் கலவரம் குறித்து கேள்வி விதிமுறைகளுக்கு எதிரானது என சிபிஎஸ்இ நிர்வாகம் ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய கேள்விக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று மக்களவையில் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…