சி.பி.எஸ்.இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்.!

Default Image

கொரோனா அச்சுறுத்தலை காரணமாக சி.பி.எஸ்.இ கல்வித்திட்ட மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் பருவமுறை, பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து மறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள், பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்