கொவைட்-19 விவகாரம்… சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு… சி.பி.எஸ்.இ செயலர் அறிவிப்பு…

Default Image
இந்தியாவில் கொவைட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொவைட்-19  வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்  31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவைட்-19 ‘ தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும்  மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும்,  மறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள், பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்