முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் காரணமாக முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பா.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.