இன்று முதல் மீண்டும் அசலப்படும் 2ஜி அலைக்கற்றை முறைகேடு..??சிபிஐ மேல்முறை விவகாரம்

Default Image
சி.பி.ஐ. மேல்முறையீடு வழக்கில் 2 ஜி வழக்கு விசாரணை மீண்டும் ஐகோர்ட்டில் இன்று முதல் நடைபெறுகிறது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறி விட்டது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல் முறையீட்டு மனுக்களை முன்கூட்டியே விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும்  சி.பி.ஐ., அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கையாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 2ஜி வழக்கு விசாரணை இன்று முதல் தினமும் நடைபெறும் என்று கடந்த செப்.,29ந்தேதி அறிவித்திருந்தார்.இந்நிலையில் 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி  நடைபெறுகிறது. முதலில் சி.பி.ஐ. மேல்முறையீடு வழக்கில் விசாரணையானது நடைபெறுகிறது.இம்முறையாவது முறையான ஆதாரத்தை சிபிஐ சமர்பித்து யார் குற்றவாளிகள் என்று நிருபிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்