Categories: இந்தியா

மதுபான கொள்கை வழக்கு.! கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ.!

Published by
மணிகண்டன்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

தற்போது, டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இதற்கான ஆதாரங்களை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ இன்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது, பின்னர் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி அரவிந்த் கெஜ்ரிவால் ஜமீனுக்கு இடைக்கால தடை பெற்றது. மேலும், நேற்று ஜாமீன் மனு மீதான விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

55 minutes ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

2 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago