சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Default Image

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது  சிபிஐ நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்  மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.சிபிஐ காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்  ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.
பின்னர்  சிதம்பரத்தின் காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை நீடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.பின்  ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனை தொடர்ந்து இன்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.அவர் வாதிடுகையில்,சிதம்பரத்தின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு வீட்டு உணவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.இறுதியாக ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது  சிபிஐ நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்