ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் காவலை வருகின்ற 27-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே  சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனாலும் சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில்  திகார் சிறையில் உள்ள அவருக்கு இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்தபடி காணொளி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.இதில் சிதம்பரத்தின் காவலை வருகின்ற 27-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்