நிரவ் மோடி கூட்டாளியான சுபாஷ் பராப்பை கைது செய்து இந்தியா கொண்டு வந்தது சிபிஐ!

Default Image

நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது தொடர்பாக, முன்னாள் ஊழியரும், தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளருமான சுபாஷ் பராப்பை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றிருந்தார். 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோசடி செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய பராப், எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருந்து சிபிஐயால் மீண்டும் இந்தியா அழைத்து வரப்பட்டார். நிரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (FIPL) நிறுவனத்தில் பணிபுரியும் 50 வயதான பராப், எகிப்திய வைர வியாபாரி கூட்டாளிகளுடன் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court