சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் திரும்பப் பெறக் கோரிப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி தவறாகப் பதிந்ததன் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தண்டனை அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு 3வாரங்களில் பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் கருணை மனுக்களைப் பரிசீலனை செய்யத் தாமதமானதால்தான் பேரறிவாளனின் தண்டனை குறைக்கப்பட்டதே ஒழிய, விசாரணையில் குறைகள் காணப்பட்டதால் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
பேரறிவாளனின் மறு ஆய்வு மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இதனால் பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்குப் பெருந்தொகை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…