சிபிஐ பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்!

Default Image

சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் திரும்பப் பெறக் கோரிப் பேரறிவாளன்  தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என  தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி தவறாகப் பதிந்ததன் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தண்டனை அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு 3வாரங்களில் பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் கருணை மனுக்களைப் பரிசீலனை செய்யத் தாமதமானதால்தான் பேரறிவாளனின் தண்டனை குறைக்கப்பட்டதே ஒழிய, விசாரணையில் குறைகள் காணப்பட்டதால் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

பேரறிவாளனின் மறு ஆய்வு மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இதனால் பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்குப் பெருந்தொகை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்