டெல்லியில் செப்டம்பர் 27-ல் காவிரி ஆணைய கூட்டம்..!

Default Image

டெல்லியில் செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் செப்டம்பர் 27-ஆம் தேதி தலைவர் ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு , கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பொதுப்பணித்துறை செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆகஸ்ட் 31-ல் நடந்த கூட்டத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாத காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க கேரளாவிற்கு உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்