ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.

நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி புகாரில் மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SFL ஃபிட்னஸ் என்ற உடற்பயிற்சி நிறுவனத்தை தொடங்க பணம் பெற்று கொண்டு மோசடி செய்துவிட்டதாக தொழிலதிபர் நிதின் பராய் என்பவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட உடற்பயிற்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருவரும் பணம் பெற்றதாகவும், ரூ.1.51 கோடியை திருப்பிக் கேட்டபோது, அவர்கள் தன்னை மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.

இதன்பின் மோசடி, ஏமாற்றுதல் போன்ற புகார்களுக்கு பதில் அளித்து ஷில்பா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராஜ் மற்றும் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். அதிர்ச்சி அளிக்கிறது. சாதனையை நேராக அமைக்க, SFL ஃபிட்னஸ், காஷிஃப் கான் நடத்தும் முயற்சி.

நாடு முழுவதும் SFL ஃபிட்னஸ் ஜிம்களை தொடங்க SFL பிராண்டின் பெயரின் உரிமையை அவர் பெற்றிருந்தார். அனைத்து ஒப்பந்தங்களும் அவரால் செய்யப்பட்டன. மேலும் அவர் வங்கி மற்றும் அன்றாட விவகாரங்களில் தொடர்பாக கையெழுத்திட்டார். அவருடைய பண பரிவர்த்தனைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதற்காக அவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட நாங்கள் பெறவில்லை.

SFL ஃபிட்னஸ் குறித்து அனைத்து உரிமையாளரும் நேரடியாக காஷிப்புடன் தொடர்பு கொள்கின்றனர். இந்த நிறுவனம் 2014-இல் மூடப்பட்டது என்றும் முற்றிலும் காஷிப் கானால் கையாளப்பட்டது எனவும் ஷில்பா ஷெட்டி ட்வீட் செய்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

12 hours ago
இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

14 hours ago
பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

15 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

15 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

16 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

16 hours ago