தனது பிறந்தநாளில் துப்பாக்கியால் வானத்தில் சுட்ட பெண் மீது வழக்கு பதிவு

Default Image

பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தனது வீட்டின் முன் ஒரு குறுகிய தெருவில் சிவப்பு மற்றும் நீல அலங்கார விளக்குகள் எரிகிறது. அப்போது ஒரு பெண் நடனமாடி கொண்டே பொது இடத்தில் கையில் துப்பாக்கியுடன் வானத்தை நோக்கி சுடுகிறார்.  இந்த வீடியோ ட்விட்டரில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு முசாபர்நகர் போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் மீதும், அவருடன் வந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்