அசாமில் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 36 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் வேலை பெறுவதற்கு சில ஆசிரியர்கள் போலியான TET தகுதி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்களை முறையாக விசாரிக்குமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதன் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ் சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அசாமில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து முப்பத்தி ஆறு ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும், அதன்பின் போலி சான்றிதழ்களை சமர்பித்து தற்பொழுது ஆசிரியர் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த 36 ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…