மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.இதையெடுத்து மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூடியது. ஆனால் சட்டப்பேரவை கூடிய சில மணி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நடைபெற இருந்த கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தாமதம் செய்து வருவதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மனு தாக்கல் செய்தார் .இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.வழக்கின் விசாரணை தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு கமல்நாத் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…