Karnataka CM Siddaramaiah [File Image]
மைசூரு: போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் உறவினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் அவர்களது உறவினர் என மொத்தம் 9 பேர் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Mysore Urban Development Authority – MUDA) அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தியதாக இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் இந்த புகாரை மைசூருவில் உள்ள விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அரசு கையகப்படுத்தும் பட்டியலில் இருந்த குறிப்பிட்ட நிலமானது போலி அவனங்களினால் அது வேறு ஒருவருக்கு சொந்தமானதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
1998ஆம் ஆண்டே அரசு கையகப்படுத்துதல் பட்டியலில் இருந்து அது விடுவிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், 2010ஆம் ஆண்டு அரசு நிலம் கையாகப்படுத்தும் பட்டியலில் கூட அந்த குறிப்பிட்ட நிலம் பட்டியலிடப்பட்டு இருந்தது என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா , அவரது மனைவி பார்வதி, நில உரிமையாளர் அவரது மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி தேவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இதே போல புகார் மாநில ஆளுநர், தலைமை செயலர், வருவாய்த்துறை செயலர் ஆகியோருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…