காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெற்றிக்கு எதிரான வழக்கு.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.!

Default Image

2019இல் கேரள வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  

கடந்த 2019ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து கேரளாவை சேர்ந்த சரிதா எஸ் நாயர் என்பவர் முதலில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

கேரள நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. கேரளா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கும் அவரது மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சரிதா எஸ் நாயர், 2019 தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்ட அதே வயநாடு தொகுதியில்போட்டியிட்டார். ஆனால், அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டிருந்ததாக அவர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்