கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ அறிவிப்பு.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரூர்க்கி நோக்கி காரை ஓட்டி செல்லும்போது ரிஷப் பந்த் கண் அசைந்ததால் விபத்து நடந்துள்ளது என்றும் தீப்பற்றி எரிந்த வாகனத்தில் இருந்து தப்பிக்க காரின் ஜன்னலை உடைத்ததாகவும் உத்தரகாண்ட் காவல்துறை டிஜிபி அசோக் குமார் கூறினார்.
ரூர்க்கி சிவில் மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்-க்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ உதவி உள்பட அனைத்து உதவிகளும் செய்து தர பிசிசிஐ தயாராக உள்ளது. ரிஷப் பந்த்-க்கு நெற்றியில் 2 வெட்டுகள், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளது. மேலும், வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரல் காயமடைந்த நிலையில், முதுகிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…