லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் கார் விபத்து; 5 பேர் பலி, 3 பேர் படுகாயம்.!

Default Image

லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி மற்றும்  3 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவோவில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மூவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில்  காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பலியானவர்கள் பாரபங்கி சித்ரகுப்த் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஆக்ராவிலிருந்து லக்னோ நோக்கிச் சென்ற ஸ்விஃப்ட் டி-சையர் கார், பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதியதில், டிவைடரைத் தாண்டி, லக்னோவில் இருந்து வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி கார் மீது மோதி இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.  அதிர்ஷ்டவசமாக SUV யில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்