கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – லெப்டினன்ட் ஜெனரல் அருண்

Published by
பாலா கலியமூர்த்தி

குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல்.

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈடுபட்ட மீட்புப்பணிகளுக்கும், உதவியர்களுக்கான பாராட்டு விழா வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த பகுதியில் உதவியவர்களுக்கு, மீட்பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு ராணுவ சார்பில் பாராட்டு மற்றும் பரிசை வழங்கினார்.

இதன்பின் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண், ஹெலிக்கப்படர் விபத்து மீட்புப் பணியின்போது அனைவரும் உதவி செய்தனர். உதவாதவர்கள் என யாரும் இல்லை. விபத்து நடந்த 10 நிமிடத்திலிருந்து அப்பகுதி மக்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பணிபுரிந்தனர்.

நெருக்கடி நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அசாதாரண சூழலை ஊடகங்கள் பொறுப்புடன் கையாண்டன எனவும் கூறினார். இதன்பின் பேசிய அவர், ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயத்துடன் மீட்க்கப்பட்ட வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

2 hours ago
“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

3 hours ago
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

4 hours ago
ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

4 hours ago
விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

5 hours ago
“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

5 hours ago