பட்டியாலா தொகுதியில் கேப்டன் அமரீந்தர் சிங் படுதோல்வி..!

Default Image

பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில்,  பாட்டியாலா  தொகுதியில் போட்டியிட்ட  கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாட்டியாலா  தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அஜீத் பால் சிங் கோலியிடம் அமரீந்தர் படுதோல்வி அடைந்தார்.

பாட்டியாலா சட்டமன்றத் தொகுதியில் 13777 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் வெற்றி பெற்றுள்ளார். அஜித் 39,852 வாக்குகளும், அமரீந்தர் 25,169 வாக்குகளும் பெற்றனர். அஜித்துக்கு 45.21 வாக்குகளும், அமரீந்தர் 28.52 சதவீத வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் மொத்தம் 88,255 வாக்குகள் பதிவாகின. கடந்த  2017 ஆம் ஆண்டு பாட்டியாலா தொகுதியில் அமரீந்தர் 52,407 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பல்பீர் சிங்கை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்